I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday 15 February 2015

டெல்லி தேர்தல் - வெற்றி பெற்றதா ஜனநாயகம் ?

டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜனாமா  செய்தது ஏன்? தனி பெரும்பாண்மை கிடைக்கும் பட்சத்தில் நினைப்பதே எழுதில் கொண்டு வர முடியும் என்பதாலா?

70 தொகுதிகளை கொண்ட சட்ட மன்ற தேர்தலிலே எழுச்சி கலந்த இளைஞர் படை என தேவைக்கேற்ப ஆதரவு, ஆகவே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டால் மொத்த இளைஞர் படையின் பேராதரவை பெற்று விடலாம் என்ற பேராசையினாலா?

ஆசை இருந்தது ஆதரவாக இருந்த கூட்டம் அடிப்படையாக தங்களை பெரிய போட்டிக்கு தயார் படுத்தி கொள்ளவில்லை, இதனை அடுத்து மேற் கொண்ட அடிப்படை ரீதியிலான தயாரிப்பின் பிரதிபலன் டெல்லியில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் 2015 சட்ட மன்ற தேர்தல் வெற்றி.

ஆம், பாராளுமன்ற தேர்தல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்ப்போமே என்ற தைரியம் தான் ஆம் ஆத்மியின் இந்த வெற்றி.

கட்சி ரீதியான சுய பரிசோதனையை எளிதில் ஒரு சில கூட்டத்தை வைத்து எந்த அளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அத்தனையும் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் செய்திருக்கிறது.

ராஜனாமா செய்த உடன் பாராளுமன்ற தேர்தல் முயற்சி, நான்கு பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, டெல்லியில் ஆட்சி நடைபெறாமல் சட்ட ஒழுங்கு நடைபெறுவதாக தர்ணா போராட்டம், டெல்லி சட்ட சபையை உடனே கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என தன்னை சாதாரனாமான மனிதனாகவே பிரதிபலித்து கொண்ட கெஜ்ரிவால், தன்னை ஒரு போதும் அரசியல் வாதி என பேசியதில்லை.

இந்த சாதாரன மனிதனால் எப்படி ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது?, அவர் இனைந்து செயல்பட்ட ஊழல் இயக்கத்தில் இருந்த கிரண் பேடி, அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்த போது அதிர்ப்தி தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணா ஹசாரேவிற்காக சேர்ந்த கூட்டம் கெஜ்ரிவால் பக்கம் திரும்பியதற்கான காரணம் என்ன?

கெஜ்ரிவால் என்ற சாமனியனை அரசியல் தலைவர் முதல் அரியணை ஏற வைத்த அதே ஊடகங்கள் தான் அடுத்த 49 நாட்களுக்குள் ஆட்சி செய்வதற்கான தகுதியை கெஜ்ரிவால் பெற்றிருக்கவில்லை என்பதனை அவருக்கு உணர்த்தியிருந்தன. கெஜ்ரிவாலை விமர்சிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதற்கேற்ற ஆயிரம் விளக்கங்கள் அவர் கூறினாலும் உண்மை என்னவோ ஆட்சி செய்யும் அளவிற்கு அவரியம் இருந்த தைரியம் இந்திய அரசியல் சமநிலையை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே அவ்வப்போதும் அவர் நடந்தவிதம் உணர்த்தியது.

புரிந்து கொண்ட கெஜ்ரிவால் அரசியலை சாமனிய வேடத்துடன் ஆழமாக அணுக ஆரம்பித்தார், சிறு குழுக்குள் உருவாக்கி மக்களின் பிரச்சனையை அவர்களில் ஒருவனாக அணுக வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டார்.

தோல்வி என்ற வார்த்தையை கேட்டாலே சோர்வுறும் சமூதாயத்தில் தொடர் வெற்றிகளை தன் பேச்சாற்றளினால் எழுதில் பெற்ற மோடியின் முதல் தோல்வி முகத்தை கெஜ்ரிவாலின் எழுச்சி என கூறுவது எப்படி ஒப்பாகும் ?

கெஜ்ரிவாலின் வெற்றி ஜனநாயகத்தின் எழுச்சி என நினைத்தால் நம்மை போன்ற முட்டாள்கள் நிச்சயமாக இருக்க முடியாது. வெற்றி பெற்றவன் ஒரு போதும் அதற்கான உழைப்பை யோசிக்க மாட்டான் என்பதே புரியாதவர்கள் சொல்லும் எதார்த்த வார்த்தைகளாகவே என்னால் பார்க்க முடிகிறது.

மோடியின் இந்த 7 மாத மத்திய ஆட்சியில் பல தோல்விகளை அடைந்து விட்டார், ஜனநாயக ரீதியான முதல் தோல்வி என டெல்லி தேர்தல் விமர்சிக்கப்பட்டாலும் மக்கள் ஒரு போதும் மோடியின் எழுச்சியையோ அல்லது மோடியினால் மட்டுமே இதை செய்ய முடியும் என்றோ வாக்களிக்கவும் இல்லை அல்லது மோடி போன்ற பேடிக்கு வாக்களிப்போவதில்லை. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற அனைத்து மாநிலங்களுமே காங்கிரஸ் கட்சியினால் பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வளர்ச்சியை எண்ணி காத்திருந்த மக்களின் ஏக்கமே மோடியின் வாக்காக மாறியது. படித்த இளைஞர்களை மட்டுமே மோடி என்ற போலி அலை ஊடகங்களால் கவர்ந்திழுக்க  காரணமாயிருந்தன தவிர மக்கள் அனைவரும் மோடி அலைக்கு தலை அசைத்துவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.

வளர்ச்சியை எண்ணி காத்திருக்கும் ஏழைகளின் மனதில் பாரதிய ஜனதா தனது கட்சியின் தனி கொள்கையை புகுத்த கூடிய வகையில் செயல்படுத்துவதே மோடியின் அவ்வப்போதைய தோல்வி முகத்திற்கான அடையாளங்கள்.

விவசாயத்தை எண்ணி காத்திருக்கும் சாமனியர்களுக்கு அவர்களின் தேவையை பெரிய நிறுவனங்களை கொண்டு ஒரு சில நகரங்களை நவீன மாக்கும் செயல் மோடிக்கு பின் வரும் கேடிகளுக்கு பல கோடிகளை சம்பாதித்து தரும் நடைமுறையாக இருந்து விட கூடாது என்பதே அனைவரின் எண்ணம் .

கெஜ்ரிவாலை வெற்றியின் நாயகனாக நாம் சித்தரித்தாலும், ஜனநாயக எழுச்சியின் முகம் என விமர்சனம் செய்தாலும் , அடிப்படையில் இவர்கள் அடையாளம் தேட முயற்சித்தவர்கள் அதற்கான அடையாளத்தை தற்போது வெற்றிகரமாக பெற்றுள்ளார்கள். இதை தவிர எழுச்சியாளன் என கெஜ்ரிவாலை விமர்சிக்கும் அளவிற்கு கெஜ்ரிவால் நடந்து கொண்டார என்றால் இல்லை.

கடந்த ஒராண்டு காலமாக எப்படியாவது விட்டு வந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்போடு வீடு வீடாக டெல்லி சாமனியனின் கையை பிடித்து கேட்ட மன்னிப்பின் கைமாறுதான் இந்த  67 தொகுதியின் வெற்றி.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கெஜ்ரிவால் காட்டும் முனைப்பும் அதற்கான உழைப்பும் மத்திய அரசின் பார்வையில் கேலி கூத்தாக போவது உறுதி. பின் நிச்சயம் வாக்குறுதிகள் அனைத்தும் குற்றச்சாட்டுகளாக தெருக்களில் சப்தங்களாக மாறும் என்பது எதிர்பார்த்ததே காரணம் கெஜ்ரிவால் எடுத்து கொண்ட ஜனநாயக அடையாளம் ”சப்தம்”. 

கை மன்னிப்புக்கு கிடைத்த மரியாதை கெஜ்ரிவாலின் சப்தத்திற்கு கிடைத்தால் மட்டுமே ஜனநாயகத்தின் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி கட்சியை கருத முடியும்.

மோடிக்கும் , கெஜ்ரிவாலுக்கும் இடையே பெரிய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியாது, காரணம் இரண்டு பேரும் ஊடக விரும்பிகள். அந்த ஊடகங்கள் தான் அவர்களை தலைவர் அந்தஸ்த்திற்கு உயர்த்தியது. இவர்கள் சார்ந்த கட்சிகளிலோ அல்லது இயக்கங்களிலோ தலைவர்கள் ஆக ஒருபோது அடையாளம் கொள்ளப்படாதவர்கள் என்பதே மேற் சொன்ன பல கருத்துகளுக்கு உதாரணம்















No comments:

Post a Comment